மரணத்திற்குப் பின்

இந்த வினாடியில் நீங்கள் உயிரோடிருக்கிறீர்கள் ;சுவாசித்து கொண்டிருக்கிறீர்; முறைப்படி உணவு அருந்திக் கொண்டிருக்கலாம்; அங்குமிங்கும் செல்லலாம், பணிபுரியலாம், உறங்கவும் செய்யலாம். சுகவாழ்வு வாழலாம் அல்லது ஏழ்மையில் ஊழலலாம். சூரியன் உதயமாகின்றது, அத்தமிக்கின்றது; ஓரிடத்தில் ஒரு மகவு பெறப்படுகின்றது. ஆன பிற நிகழ்ச்சிகளோடுங்ககூட எங்கோ ஒருவர் மரணம் அடைகின்றார்.

வாழ்க்கை முழுவதும் தற்காலிகச் செயல்கள் தாம்.
ஆனால் மரணத்திற்குப் பின் எங்கே செல்கின்றேன்?

நான் பெயர்க் கிறிஸ்தவனாகவும் இருக்கலாம்.
அல்லது மகம்மதியனாக இருக்கலாம்.
அல்லது புத்த சமயத்தயமைந்தவராயிருக்கலாம்.
அல்லது யூதராயிருக்கலாம்.
அல்லது வேறு ஒரு மார்க்கத்தாராயிருக்கலாம்.
அல்லது எந்த சமயத்தையும் நம்பாதவராகவுமிருக்கலாம். 
ஆனால் நாம் இந்த சிறப்பான வினாவுக்கு விடை மொழியத்தான் வேண்டும்,

ஏனெனில் இக்குறை நேர உலக வாழ்வுக்குப்பின் மனிதன் அவனது நிறைவான நீண்ட நித்திய இல்லம் ஏகின்றான்.

ஆனால் எங்கே?

ஏனெனில்: நீர் அடக்கம் பண்ணப்படும் கல்லறை உமது ஆத்துமாவை அடக்கி வைப்பதில்லை, அல்லது வன விலங்குகளாலோ, பறவைகளாலோ பூசிக்கப்பட்டாலும் அவை உமது ஆத்துமாவை விழுங்குவதில்லை, அல்லது உமது உடலை சுடலையில் இட்டாலும் உமது ஆத்துமாவை அது அழிப்பதில்லை.

உமது ஆத்துமா ஒரு போதும் இறப்பதில்லை!

முழுமையான உரை: மரணத்திற்குப் பின்

வானத்தையும், பூமியையும் படைத்த கடவுள் சொன்னார் “எல்லா ஆத்துமாவும் என்னுடையது “என்று.

(இந்த வாழ்விலே) இந்த உடலினால் நீர் புரிந்த செயல்களை அவை தீமையோ நன்மையோ மறுமையில் உமது ஆத்துமா அல்லது “நீர் சந்திப்பீர்”.

நாம் உண்மையுடன் தொழுதிருக்கலாம்
நாம் தவங்கள் இயற்றியிருக்கலாம்
நாம் களவாய் எடுத்ததைத் திரும்பத் தந்துமிருக்கலாம்
இவை எல்லாம் அவசியந்தான்.

ஆனால்

நமது பாவங்களுக்கு நாமே பிராயச்சித்தம் செய்ய இயலாது. வானலோகத்தின் கடவுள் பூமியின் நீதி தவறாத நியாயாதிபதி உமது பாவத்தையும், வாழ்வையும் அறிந்துள்ளார். உமது பாவத்துடன் எதிர்கால மறு உலகின் ஆசீர்வாதங்களுக்குள்ளும், மகிமைக்குள்ளும் நுழைய இயலாது.

ஆனால்

இந்த வானலோகக் கடவுள் அன்பின் ஆண்டவர் அவர் உமது வாழ்வும் ஆத்துமாவும் மீட்படைய ஒரு வழி வகுத்துள்ளார். 

நீர் ஜெபித்து, உமது பாவங்களை தேவனிடம் அறிக்கையிட்டால், நீர் நித்திய அழிவு, நரகத் தீ என்னும் சாபத்திற்குட்பட வேண்டியதில்லை. தேவன் இயேசுக் கிறிஸ்துவாகிய தமது மகன் மூலமாக மன்னிப்பை அருளுவார்.

இந்த இயேசு உமது தீய செயல்களுக்காக தண்டிக்கப்பட்டார், இந்த இயேசுவை, இக்கர்த்தரை மாத்திரமே நீர் தொழுது, ஜெபித்தால் அவர் உமது வாழ்வுக்குச்’ சாந்தி’ அருளி, மரணத்திற்குப் பின், மகிமையான வாழ்வைக் கொடுப்பார். ஆனால் இந்த இயேசு உயிருள்ள தேவனின் குமாரன் உமது சொந்த மீட்பராக முதலில் ஆக வேண்டும். பிறகுதான் உமது ஆத்துமாவுக்கான மகிழ்வும், ஆறுதலுமான நித்திய இல்லம் நிச்சயமாகும்.

ஆனாலோ! இயேசுவின் இந்த மீட்கும் அன்பை இவ்வாழ்வில் புறக்கணித்தோருக்கு அழிவின் பாதாளமும், முடிவற்ற தீயுமே பங்காகும். மரணத்திற்குப் பிறகு மீட்போ, திருப்பமோ இல்லை. முடிவின்றி நித்தியா, நித்தியமாக நிரந்தர அழுகையும், புலம்பலும்,பற்கடிப்புமே இருக்கும். தூய ‘விவிலிய’ நூல் ஒன்றைப்பெற்று உமக்கான தேவனுடைய திட்டத்தை நீரே படித்துப்பாரும்.

இந்தக் கடவுள், அவரது தூயத் திருமறையில் விரைவில் வரும் உலகின் இறுதி நியாயத் தீர்ப்பை பற்றி விவரமாக எச்சரித்துள்ளார். இந்தத் தூய வேதநூல் அந்த நிச்சயமான நியாயர்தீர்ப்பின் நாளுக்கு முன்னாகத் தெளிவான குறிப்பிடத்தகுந்த அடையாளங்கள் நிகழும் எனவும் முன்னறிவிக்கின்றது.

அவரது வருகைக்கு முன் சண்டைகளும் யுத்தங்களின் செய்திகளும். துன்பமும், நாடுகளுக்குள் கலக்கமும் அதாவது ஒன்றோடொன்று நாடுகள் போர் செய்து கொள்ளும் எனவும் அவைகளின் நோக்கங்கள் கொள்கைகள் ஆனவற்றின் வேறுபாடுகளைத் தீர்த்துக்கொள்ள முடியாதநிலமை இருக்கும் என்றும் கூறுகின்றது அது.

பல இடங்களிலும் பூமி அதிர்வுகளும், கொள்ளை நோய்களும் இருக்கும். இவை யாவும் சமீப ஆண்டுகளில் நிறைவேறிக்கொண்டு வருகின்றன. மேலும் தீயோர் மேலும் தீமையே புரிவர் என்றும் அது முன்னறிவிக்கின்றது. அதே சமயத்திலேயே மக்கள் எச்சரிக்கைகளுக்குச் செவி மடுக்காமல் கடவுளை நேசிக்காமல் இன்பப்பிரியராக ஆவர் என்றும் கூறுகின்றது.

நீதியுள்ள நமது பெரிய நியாயாதிபதி நமது தற்கால செல்வத்தினாலோ, ஏழ்மையினாலோ,புகழினாலோ, இகழ்வினாலோ, நிறத்தினாலோ, இனத்தினாலோ, குலத்தினாலோ, கொள்கையினாலோ,ஈர்க்கப்பட மாட்டார் என்று நாம் ஞாபகத்தில் கொள்ள வேண்டும். அவரது மீட்சியின் வாய்ப்பைப் புறக்கணித்தால் ஒரு நாளில் நமது படைப்புக்கர்த்தாவும் நீதிபதியுமானவர் முன்பாக செயலற்று நிற்போம். வரும் முடிவில்லா நித்தியத்தில் கடிகாரம் இராது. நூற்றாண்டுகளுக்கும் கணிப்பு இராது.

பாவிகள், கடவுளற்றவர்கள் இன்னவரது, உபத்திரவத்தின் புகை எப்பொழுதுமாகப் புகைந்து கொண்டே இருக்கும் அதே சமயத்தில் மீட்க பட்டவர்களது மகிழ்ச்சியும் பாடலும், பேரானந்தமும், சுகமும் மோட்சத்தில் முடிவில்லாததாகவே இருக்கும்.

இப்பொழுதே நீங்கள் ஒன்றைத்தெரிந்துகொள்ளுங்கள்! சீக்கிரமாகவே வேலை பிந்திப்போகலாம்.மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான்,ஆகிய நற்செய்திகளை வாசியுங்கள் பின் ஒரு புதியேற்பாட்டையும் கேட்டுப் பெறுங்கள். அதன் பின் முழு விவிலியத்தையும் வாங்கிக்கொள்ளுங்கள்.

தொடர்பு கொள்க

ஆர்டர் பாதைகள்

வாழத்தகுந்த வாழ்க்கை

இவ்வாழ்க்கை  முழு மகிழ்வுடனும், வரும் நித்திய வாழ்வையும் நன்றாகத் துய்க்க வேண்டும் என்று விரும்பாத ஆணோ, பெண்ணோ, சிறுவனோ சிறுமியோ எங்கணும் உண்டோ? பேதுரு அப்போஸ்தலர் தனது முதல் நிருபத்தில் மூன்றாம் அதிகாரம் பத்து முதல் பன்னிரண்டு வசனங்களில்”ஜீவனை விரும்பி(அல்லது துய்த்து) நல்ல நாட்களைக் காண வேண்டுமென்றிருக்கிறவன்,பொல்லாப்புக் குத்தன் நாவையும், கபடத்துக்குத் தன் உதடுகளையும் விளக்கிக்காத்து , பொல்லாப்பை விட்டு நீங்கி, நன்மை செய்து சமாதானத்தைத் தேடி அதைப் பின் தொடரக்கடவன். கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள் மேல் நோக்கமாயிருக்கிறது. அவருடைய செவிகள் அவர்கள் வேண்டுதலுக்குக் கவனமாயிருக்கிறது, தீமை செய்கிறவர்களுக்குகோ கர்த்தருடைய முகம் விரோதமாயிருக்கிறது” என்று எழுதுகிறார். தற்காலத்துக்கும் நித்தியத்துக்கும் வேண்டிய அடித்தளம் அமைக்கவும், மகிழ்ச்சிக்கும் வேண்டிய போதனைகள் இந்த சில சொற்களிலேயே இருக்கின்றன. சங்கீதம் 34:12-16 ல் உள்ள வசனங்களையே அப்போஸ்தலர் எடுத்தாள்வது இதை மேலும் வலியுறுத்துகின்றதுs. 

எவ்வளவோ சமயங்களில் நாம் வம்பும், புத்தி ஈனமான பேச்சிலும், பரிகாசத்திலும் ஈடுபட்டிருக்கிறோம். எபேசியர் 5:4ன் படி அவை தகாத பாவம் என்னப்படுகின்றன. அனேக சமயங்களில் அப்படிப்பட்ட பேச்சுகள் உண்மையற்றவையாயும் இருக்கின்றன.  ஆகவே இரட்டை பாவமாகின்றன அவை. அது நல்ல நாட்களையும், வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் கொண்டு வருவதில்லை. நாவு சரீரத்தில் சிறிய அவயவமாயிருந்தும் அது ”நெருப்பு தான், அது அநீதி நிறைந்த உலகம்.. அது அடங்காத பொல்லாங்குள்ளதும் சாவுக் கேதுவான விஷம் நிறைந்ததுமாயிருக்கிறது” யாராலும் அடக்க முடியாது என்று யாக்கோபு சொல்லுகிறார். ஆயினும் கிறிஸ்தவர்கள் அதை அடக்கி,  ஆளுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது நீங்கள் அது முடியாதது என்று கூறலாம்.

முழுமையான உரை: வாழத்தகுந்த வாழ்க்கை

ஆயினும்” தேவனால் எல்லாம் கூடும்” மத்தேயு 19:26, யாக்கோபு 1:26 ல்” உங்களில் ஒருவன் தன் நாவை அடக்காமல் தன் இருதயத்தை வஞ்சித்து தன்னை தேவ பக்தி உள்ளவன் என்று எண்ணினால் அவனுடைய தேவ பக்தி வீணாயிருக்கும்” என்று வாசிக்கிறோம். வீணான மதம் நமக்கு இவ் வாழ்விலும் வரும் வாழ்விலும் நல்ல நாட்களை கொண்டு வராது. 

அப்போஸ்தலர் நாவு, உதடு இவற்றிலாகிய தீமைகளை மட்டுமன்றி எல்லாத் தீமைகளையும் சேர்த்துக்கொள்கிறார். பொல்லாப்பை விட்டு நீங்கி, நன்மை செய்து, சமாதானத்தைத் தேடி அதைப் பின் தொடரக் கடவன் என்று சொல்கிறார். நன்மை செய்யத்தெரிந்தும் அதைச் செய்யாது அலட்சியம் செய்தலையும் அவர் பாவம் என்கிறார். தேவனிடத்திலும் மனிதனிடத்திலும் சமாதானத்தைத் தேட வேண்டும். தேவனோடு சமாதானமாயிருக்க அவருடைய சமாதான கொள்கைகளுக்கு உட்பட வேண்டும். அதாவது உண்மையான உணர்வுள்ள மனஸ்தாபத்தினால் உண்டான, கிறிஸ்துவின் இரத்தத்தினால் கழுவப்பட்ட பாவம் இயேசு கிறிஸ்துவின் மூலம் இவ்வாறு நீதிக்குள்ளானவர்களே நீதிமான்களாக்கப்பட்டு நீதிமான்களோடு ஒன்றாக கருதப்படுவார்கள். அவர்களைப் பற்றியே வேத வாக்கியம்” கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள் மேல் நோக்கமாயிருக்கிறது. அவருடைய செவிகள் அவர்கள் வேண்டுதலுக்குக் கவனமாயிருக்கிறது” என்று கூறுகிறது. அவர்களுக்கு மட்டுமே தேவன் பக்கத்தில் இருக்கிறார். அவரது ஆசீர்வாதம் தொடரும். இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள் அவர்களும் ஆசீர்வாதமாய் இருப்பார்கள். சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள். 

இத்தகைய அறிவுள்ள வாழ்வுமுறையை எல்லோரும் கைக்கொள்ளுகிற வர்கள் அல்ல என்றும் சொல்லப்படுகின்றது. அப்படி கை கொள்ளாதவர்களைப் பற்றி தீமை செய்கிறவர்களுக்குகோ கர்த்தருடைய முகம் விரோதமாயிருக்கிறது என்று சொல்லப்பட்டுள்ளது. விரும்பி துய்க் கக்கூடிய நல்வாழ்க்கையையும் நன்னாட்களையும் அது உண்டாக்காது. 

கர்த்தர் ஏசாயாத் தீர்க்கதரிசியின் மூலம் நீதிமான்களுக்கு நன்மையும் தீயவர்களுக்கு கேடுமே உண்டாகும் என்று கூறியிருக்கிறார். 

தன் கடந்த வாழ்வைத் திரும்பிப் பார்க்கும் ஒரு பாவி அவனது பாவங்கள் கொடுமை செய்வதாலும் தன்னை அழுத்துவதாலும் கர்த்தருடைய முகம் அவனுக்கு விரோதமாக இருப்பதாக உணர்கிறான். அந்த நிலையில் அவன் வாழ்வை விரும்ப முடியாது. கர்த்தர் கண்டித்து உணர்த்தும்போது அதைப் பின்பற்றாமல் அப்படிப்பட்டவர் பல சமயங்களில் ஒரு பாவத்திலிருந்து மற்றொரு பாவத்திற்குத் தன்னை இழுத்துக் கொண்டு போவதற்குச் சாத்தானுக்குத் தன்னை ஒப்புக்கொடுத்து விடுகிற தளர்ந்த நிலைக்கு அவர் வந்துவிடுகிறார். தன்னையே மாய்க்கும் இந்த நிலையினின்று உலகமுழுவதும் மீள மக்களை எச்சரிக்கக்கூடிய வன்மையான சத்தம் எவ்வளவு அவசியம்! தற்கொலையின் மூலம் மனற்திரும்பக்கூடிய தருணம் துண்டிக்கப்படுவதனால் ஆத்துமாவும் உடலும் நரகத்தில் அழியுமே. வெளிப்படுதல் 21:8 ல் கொலை பாதகர் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்று நாம் வாசித்திருக்கிறோம். இவ்வாறான பயங்கரமான நடவடிக்கையினின்று அவர்களை விலக்கி வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்: நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் என்று அறை கூவும் இயேசுவின் அன்பின் அழைப்பை ஏற்றுக்கொள்ள வழிநடத்தினால் எவ்வளவு நல்லது. உங்கள் ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் நித்திய நரக அழிவின் பயத்தினின்று இளைப்பாறுதல். உங்கள் பாவங்கள் நிவர்த்தி செய்யப்படும் பொருட்டு நீங்கள் மனந்திரும்பிக்குணப்படுங்கள் அப்போ 3:20 அப்போது நேசமுள்ள வாழ்வும், நல் இளைப்பாறுதலுள்ள காலமும் வரும். இவ்வுலகில் இல்லாவிட்டாலும் சொல்லமுடியாத விலைமிக்க நித்திய மோட்ச வாழ்வு பிறகு வரும். அப்போது தேவனுடைய சுதந்திரமும் கிறிஸ்துவுக்கு உடன் சுதந்திரருமாமே. “தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத்தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்” யோவான் 3:16

தொடர்பு கொள்க

ஆர்டர் பாதைகள்

உன் வாழ்க்கை பதிவேட்டில் பதிவு செய்யப்படுகிறது

இயேசுவானவர்மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்பு நாளிலே கணக்கொப்புவிக்க வேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் ; ஏனெனில், உன் வார்த்தைகளினாலே  நீதிமான் என தீர்க்கப்படுவாய் அல்லது குற்றவாளி என்று தீர்க்கப்படுவாய்மத்தேயு 12:36-37 என்று சொன்னபோது, ஜனங்கள் தங்கள் கிரியைகளுக்கு கணக்கு ஒப்புவிக்க வேண்டும் என்பதை அவர்களுக்கு நினைப்பூacட்டினார். தங்கல் கிரியைகளுக்கு அவர்கள் விளக்கங்கூறி அவைகளுக்கு அவர்கள் கணக்கு ஒப்புவிக்க வேண்டும் என்பது தான் அதின் கருத்து

கர்த்தர் எவ்விதமாக கணக்கு வைக்கிறார் என்பதை பரிசுத்த வேதாகமம் வெளிப்படுத்துகிறதில்லை. ஆனால் அது மிகவும் சரியான பதிவேடாகவும் மாற்றக் கூடாததாகவும் இருக்கும். “மரித்தோராகிய சிறியோரையும் பெரியாரையும் தேவனுக்கு முன் நிற்கக்கண்டேன்; அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன. ஜீவ புஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது. அந்த புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர்  தங்கள், தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள்”. 

ஜீவ புஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்னிக் கடலிலே தள்ளப்பட்டான். வெளி :20.12.15. 

கடவுள் பெரியவரும் சர்வ ஞானமுள்ள சர்வ வல்லமையுள்ளவரும், சர்வ வியாபியாவருமாயிருக்கிறார். தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும் இருபுறமும் கருக்குள்ள எந்த பட்டயத்திலும் கருக்கனதாயும், ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக்குத்துகிறதாயும் இருதியத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது. அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய கண்களுக்கு முன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது; அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்க வேண்டும். எபி 4:12-13. 

முழுமையான உரை: உன் வாழ்க்கை பதிவேட்டில் பதிவு செய்யப்படுகிறது

கர்த்தர் நினைவுகளையும் யோசனைகளையும் கூட அவ்வளவு நுணுக்கமாக நியாயந்தீர்க்க போகிறாரென்றால், உண்மையாகவே அவர் மனிதனுடைய லேசான சிந்தனைகள், கேலி பேசுதல் முட்டாள்தனமான பேச்சுக்கள், தேவனுடைய நாமத்தை வீணிலே வழங்குதல், சபித்தல், ஆணையிடுதல் மாய்மாலம் நிர்விசாரம், கோபம், விரோதம், தூஷணம்பேசுதல், களியாட்டு, குடிப்பழக்கம், வேசித்தனம், விபச்சாரம், திருடு, கொலை, விக்கிரகாராதனை பில்லி சூனியம், தற்புகழ்ச்சி, அசுத்த காமம், கடுங்கோபம், போராட்டம், தேச துரோகம், அவிசுவாசம், பொறாமை, பெற்றோருக்கு கீழ்படியாமை, சுயநலம், பரிசுத்தமின்மை, அசுத்தமான பொருளாசை, பிறர் பொருள் இச்சித்தல், தற்பெருமை, பெருமை, தேவதூஷணம், நன்றி இல்லாமை, இயற்கைக்கு விரோதமான அன்பு, சமாதானத்தை மீறுதல், பொய்க் குற்றச்சாட்டுகள், கற்பை காக்காமல் இருத்தல், நல்லவர்களை தாழ்வாக நினைப்பது, மூர்க்கத்தனம், காட்டிக்கொடுத்தல், மண்டைக் கர்வம், மேம்பாடான எண்ணம், கடவுளை விட சிற்றன்பங்களை நேசித்தல், கடவுளுடைய வல்லமையை நிராகரித்தல், கிறிஸ்துவின் திரு இரத்தத்தை அசுத்தமாக நினைத்தால், மந்திரத்தில் நம்பிக்கை பொய்யை உண்டாக்கி அதை நேசித்தல், முதலியவைகளை அவர் விட்டு வைக்க மாட்டார்(கலாத்:5:19-21,2 தீமோ: 3.2-5) 

ஏனென்றால் சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது, தீமைக்காவது தக்க பலனை அடையும் படிக்கு நாமெல்லாரும், கிறிஸ்துவின் நியாயசனத்திற்கு முன்பாக வெளிப்பட வேண்டும்(2 கோரிந்5:10) 

நீதிமானே இரட்சிக்கப்படுவது அரிதானால் பத்தியில்லாதவனும் பாவியும் எங்கே நிற்பான். (1 பேதுரு 4:18) அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி எனக்கு விரோதமாய் பாவஞ் செய்தவன் எவனோ அவன் பெயரை என் புஸ்தகத்திலிருந்து கிறுக்குப் போடுவேன் யாத் 32.33 நமது எண்ணங்களை கர்த்தல் தூரத்திலிருந்து அறிகிறார். நாம் அவர் முன் திறந்து வைக்கப்பட்ட புஸ்தகம் போல் இருக்கிறோம். நான் செய்த எல்லாவற்றையும் இயேசு சொன்னார்; அவரை வந்து பாருங்கள்(யோவான்4.29). 

ஜீவ புத்தகத்தில் ஒருவனுடைய பெயர் எழுதப்படவேண்டுமென்றால் நாம் இயேசுவினுடைய அழைப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். ” வருத்தப்பட்டு பாரஞ் சுமக்கிறவர்களே நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்மத்11.28 எல்லாரும் கடவுளுக்கு முன்பாக ஏதாவது பாவஞ் செய்திருக்கிறார்கள் ரோமர் 5:12 எல்லா மனிதருக்கும் ஒரு இரட்சகர் தேவை. “இயேசு அவனுக்கு பிரதியுத்தரமாக, ஒருவன் மறுபடியும் பிறவா விட்டால் தேவனுடைய இராஜ்ஜீயத்தைக் காண மாட்டான்”. யோவான் 3.3. நீங்கள் மனந்திரும்பி பிள்ளைகளைப் போல் ஆகாவிட்டால் பரலோக  இராஜ்ஜீயத்தில் பிரவேசிக்க மாட்டீர்கள்”  மத் 18.3 இயேசு ஒவ்வொரு வரையும் தன்னுடைய பாவத்தினின்று இரட்சிக்கப் பட, தன்னிடம் அழைக்கிறார். அவர் யாரை மன்னிகிறாரோ அவனை தன்னுடைய பிள்ளையாக ஏற்றுக் கொள்கிறார். பிள்ளை (குமாரன்) என்றால் தேவனுடைய சுதந்திரவாளியாகிறான்

ஜீவ புத்தகத்தில் நமது பெயர்களை பத்திரப் படுத்துவதற்குஇதோ சீக்கிரமாய் வருகிறேன். ஒருவனும் தன் கிரீடத்தை எடுத்துக் கொள்ளாதபடிக்கு உனக்குள்ளதை பற்றிக் கொண்டிரு”(வெளி3:11) என்று ஆண்டவர் சொல்கிறார். மத்26:41 ல் நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள். ஆவி உற்சாகமுள்ளதுதான். மாம்சமோ பலவீனமுள்ளதுஎன்று  இயேசு சொல்கிறார் அப்போஸ்தலனாகிய பவுல் கொரிந்திய விசுவாசிகளுக்கு 1கொரிந்த் 16:13 ல்விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள், புருஷராயிருங்கள், திடன் கொள்ளுங்கள் என்று சொல்கிறார். கிறிஸ்தவ விசுவாசிகளுக்கு அப்போஸ்தலனாகிய பேதுரு 1 பேதுரு 4:7 ல் " எல்லாவற்றிருக்கும் முடிவு சமீபமாயிருக்கிறது

ஆகையால் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து ஜெபம் பண்ணுவதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள் என்று சொல்லுகிறார். அப்படியே 5ம் அதிகாரம் 8,9 வசனங்களில் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள் விழித்திருங்கள். ஏனெனில் உங்கள் எதிராளியாகிய  பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம் போல் எவனை விழுங்கலாமோ என்று வகை தேடிச்சுற்றித் திரிகிறான் விசுவாசத்தில் உறுதியாயிருந்து அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள் ஜெயங் கொள்ளுகிறவள் எவனோ அவனுக்கு வெண் வஸ்திரம்  தரிக்கப்படும். ஜீவ புஸ்தகத்தில் இருந்து  அவனுடைய நாமத்தை நான் கிறுக்கிப் போடாமல், என் பிதா முன்பாகவும் அவருடைய  தூதர் முன்பாகவும், அவன் நாமத்தை அறிக்கையிடுவேன்வெளி 3:5. நம்மை செம்மைப்படுத்தி  நியாயத்தீர்ப்பு நாளில் கணக்கொப்புவிக்க நம்மை ஆயத்தம் செய்து கொள்ள இது கிருபையின் காலமாக இருக்கிறது. இந்த சாவுக்கேதுவான சரிரம் சீக்கிரம் மண்ணுக்குத் திரும்பும், அல்லது அவர் வருகையில் நாம் அவரைச் சந்தித்தோமானால், சத்திய வேதம் சொல்லுகிறபடி நம்முடைய உடல் அழியாததாக மாறும்

எவ்வளவு ஜாக்கிறதையாக நாம் நம்முடைய எண்ணங்களையும் வார்த்தைகளையும் கிரியைகளையும் காப்பாற்ற வேண்டும். “இதோ இரட்சிக்க கூடாத படிக்கு கர்த்தருடைய கை குறுகி போகவும் இல்லை; கேட்க கூடாத படிக்கு அவருடைய செவி மந்தமாகவும் இல்லைஏசா 59:1. அப்பெரிய முக்கியமான நாளன்று நாம் வெண் வஸ்திரம் தரித்தவர்களாய், அந்த மகிமையான மோட்சத்தில் பிரவேசிக்க, நம்முடைய இருதயத்தில் ஏதாவது குறை இருந்தால் அது கழுவப்பட (மன்னிக்கப்பட) நான் இயேசுவினிடத்தில் போவோமாகதீட்டுள்ளதும் அருவருப்பையும், பொய்யையும் நடப்பிக்கிறதுமாகிய ஒன்றும் அதில் பிரவேசிப்பதில்லை ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புஸ்தகத்தில் எழுதப்பட்டவர்கள் மாத்திரம் அதில் பிரவேசிப்பார்கள்”  வெளி 21:27. 

தொடர்பு கொள்க

ஆர்டர் பாதைகள்